கங்கை நீரை இதற்கு முன்னதாக பிரியங்கா குடித்திருக்க முடியுமா? மத்திய அமைச்சர் கேள்வி


கங்கை நீரை இதற்கு முன்னதாக பிரியங்கா குடித்திருக்க முடியுமா? மத்திய அமைச்சர் கேள்வி
x
தினத்தந்தி 25 March 2019 10:33 AM GMT (Updated: 25 March 2019 10:33 AM GMT)

கங்கைக்கு பூஜை செய்யாத பிரியங்கா காந்தி, நீரை அள்ளிக்குடித்ததை முன்வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொள்கிறது.


உத்தரபிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கங்கை நதி வழியாக படகில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.

பெரும்பாலான நிஷாத், மால்லா சமூகத்தினர் கங்கை நதிக்கரையின் ஓரத்தில் வசிப்பதால், அவர்களை படகின் மூலம் சென்று சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டார். அப்போது கோவில்களுக்கும் சென்றார், சிறப்பு பூஜையும் செய்தார். கங்கை நதிக்கும் பூஜையை செய்தார்.

அப்போது கங்கையின் நீரை அவர் அள்ளிக் குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. கங்கையை சுத்தம் செய்வோம் என பா.ஜனதா ஏற்கனவே வாக்குறுதியை கொடுத்திருந்தது. அதற்கான பணிகளையும் மேற்கொள்வதாக கூறியது.

இப்போது பிரியங்காவின் இந்த வீடியோவை வைத்து, நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் குடித்திருக்க முடியுமா? என்று பா.ஜனதாவினர் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கங்கை மோசமாக இருந்தது என்றும் இப்போது சுத்தமாகியுள்ளது எனவும் பிரசாரம் செய்கிறார்கள். 

இப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கங்கை நீரை இதற்கு முன்னதாக பிரியங்கா குடித்திருக்க முடியுமா? என கேள்வியை எழுப்பியுள்ளார். பா.ஜனதா அரசு கங்கையை சுத்தம் செய்ததால்தான் அதன் நீரை பிரியங்கா அருந்த முடிந்தது.

பிரயாக்ராஜிலிருந்து வாரணாசிக்கு நீர்வழிப் பாதையை எங்களுடைய அரசு அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்று பிரியங்கா கங்கையில் பயணம் செய்திருக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்பியுள்ள கட்காரி, 2020 மார்ச் மாதத்திற்குள் கங்கை  100 சதவிகிதம் சுத்தமாகி விடும் என கூறியுள்ளார். 


Next Story