நியூசிலாந்து தாக்குதலுக்கு பழி தீர்க்க கோவாவில் சுற்றுலா பயணிகளை தாக்க திட்டமா? - போலீசார் உஷார்


நியூசிலாந்து தாக்குதலுக்கு பழி தீர்க்க கோவாவில் சுற்றுலா பயணிகளை தாக்க திட்டமா? - போலீசார் உஷார்
x
தினத்தந்தி 25 March 2019 8:45 PM GMT (Updated: 25 March 2019 8:45 PM GMT)

நியூசிலாந்து தாக்குதலுக்கு பழி தீர்க்க கோவாவில் சுற்றுலா பயணிகளை தாக்க திட்டம் குறித்த பீதி எதிரொலியாக, போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பனாஜி,

கடந்த 15-ந் தேதி, நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் பலியானார்கள். இதற்கு பழி வாங்குவதற்காக, கோவா மாநிலத்துக்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால், கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணியரிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நாட்டினர் அதிகமாக நடமாடும் இடங்களை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.


Next Story