ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 28 March 2019 2:19 AM GMT (Updated: 28 March 2019 2:42 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின்  சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில்,3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கர ஆயுதங்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. வேறு சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 


Next Story