பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு


பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு
x
தினத்தந்தி 31 March 2019 2:25 PM GMT (Updated: 31 March 2019 2:25 PM GMT)

ஆந்திராவில் பிரசாரத்தின் போது கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 11–ந் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா பிரசாரம் செய்து வருகிறார். 

குண்டூரில் பிரசாரம் முடிந்து வாகனத்தில் செல்லும் போது தொண்டர்களுடன் காரில் இருந்தவாறு கைகுழுக்கினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் கைகுலுக்குவதுபோல ‌ஷர்மிளாவின் மோதிரத்தை நைசாக உருவிக்கொண்டு சென்றுவிட்டார். ஷர்மிளா கையை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. தொண்டர் நைசாக மோதிரத்தை உருவிவிட்டார். கூட்டத்தில் தனது மோதிரத்தை திருடியது யார் என்பதை ஷர்மிளாவல் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் விரல்களை பார்த்தவாறு மற்றொரு இடத்திற்கு பிரசாரம் செய்ய சென்றார். 

Next Story