தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது -பிரியங்கா காந்தி


தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது -பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 9 April 2019 12:16 PM GMT (Updated: 9 April 2019 12:16 PM GMT)

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உ.பி. கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். 

ஷகாரன்பூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி பேசுகையில், நாங்கள் தேர்தலில் வெற்றிப்பெறுவோம் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பா.ஜனதாவிற்கு எதிராக அதிகமான கோபம் உள்ளது. காங்கிரசுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. எங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறேன், நாங்கள் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற முடியும் என கூறியுள்ளார்.

Next Story