அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி


அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 April 2019 12:09 PM GMT (Updated: 14 April 2019 12:09 PM GMT)

அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி பிரதமர் என்று கூறியதை முன்வைத்து,  அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தார், கொள்ளையடித்துள்ளனர்.  மாநிலத்தின் எதிர்காலம் கருதி அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களை தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் நோக்கம் என்னவென்றால் நாட்டை துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற பிரதமர் மோடி, காஷ்மீரி பண்டிட்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். 

Next Story