திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி : ராகுல் காந்தி மீது வழக்கு தொடர போவதாக லலித் மோடி மிரட்டல்


திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி : ராகுல் காந்தி மீது வழக்கு தொடர போவதாக லலித் மோடி மிரட்டல்
x
தினத்தந்தி 19 April 2019 5:36 AM GMT (Updated: 19 April 2019 5:36 AM GMT)

திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி என்று இருக்கிறது என கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி மிரட்டல் விடுத்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தில், திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற வார்த்தை இருக்கிறது என்று பேசினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நிதிமுறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது ட்விட்டர் பதிவில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போவதாகவும் 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.


Next Story