காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டி - பிரியங்கா காந்தி


காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டி - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 21 April 2019 12:23 PM GMT (Updated: 21 April 2019 12:23 PM GMT)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடலாம் என பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளார் என தெரிகிறது. இப்போது வாரணாசியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவரும் என்னுடைய சகோதரருமான ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். 

ஏற்கனவே ரேபரேலியில் பிரியங்காவிடம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தினர். அப்போது வாரணாசியில் போட்டியிட வேண்டாமா? என்ற கேள்வியை அவர்கள் மத்தியில் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story