ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு


ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 5:27 AM GMT (Updated: 22 April 2019 5:27 AM GMT)

ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியைக்காண வந்திருந்த  பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 போட்டியை காண்பதற்கு இடமளிக்காமல் தொடர்ந்து இடையூறு அளித்ததாகவும் இதனை தட்டிக்கேட்ட போது, பிரஷாந்தி மற்றும் அவருடன் வந்த 5 பேர் தன்னை மிரட்டியதாக  பாதிக்கப்பட்ட நபர், போலீசில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஐபிசி பிரிவு 341, 188, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story