மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி


மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 April 2019 3:02 AM GMT (Updated: 23 April 2019 3:02 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

அகமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.   கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நிஸான் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.  பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story