மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் அடித்துகொலை


மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் அடித்துகொலை
x
தினத்தந்தி 23 April 2019 7:30 PM GMT (Updated: 23 April 2019 7:12 PM GMT)

மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் அடித்துகொல்லப்பட்டார்.


முர்ஷிதாபாத்,

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட பிலிக்ராம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் காத்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லியாரூல் சேக்(வயது52) என்பவர் உயிரிழந்தார்.


Next Story