தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரிக்கிறார்


தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரிக்கிறார்
x
தினத்தந்தி 23 April 2019 10:15 PM GMT (Updated: 23 April 2019 10:07 PM GMT)

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரிக்க உள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். தன் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமித்தார்.

இதுபற்றி நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் கேட்டபோது அவரும் உறுதி செய்தார். மேலும் அவர் கூறும்போது, எனக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி ரமணா மற்றும் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரையும் தனது அமர்வில் இணைத்து இந்த விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story