போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி, காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி


போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி, காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி
x
தினத்தந்தி 24 April 2019 7:53 AM GMT (Updated: 24 April 2019 7:53 AM GMT)

பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த எம்.பி உதித்ராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுடெல்லி,

வடமேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியானவர் உதித்ராஜ்.  தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது.  தனது கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில், கிழக்கு டெல்லியில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், உதித்ராஜ் ஓரங்கட்டப்பட்டார்.

 இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலகப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித்ராஜ் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

Next Story