இங்கிலாந்து வசம் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இங்கிலாந்து வசம் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 8:28 PM GMT)

தென்னிந்தியாவில் 14–ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது. இது, 108 காரட் கொண்டது. இந்தியாவில் காலனி ஆட்சி நடந்தபோது, இந்த வைரம் ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது.

புதுடெல்லி, 

கோஹினூர் வைரத்தை அவர்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் கொண்டு சென்று வைத்தனர். கோஹினூர் வைரத்தை ஏலம் விட இங்கிலாந்து முடிவு செய்தபோது, அதை தடுக்கக்கோரியும், இந்தியாவுக்கு மீட்டுவர உத்தரவிடக்கோரியும் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், வெளிநாட்டு அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, கடந்த 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அம்மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர், அதே ஆண்டு நவம்பர் மாதம் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இப்பிரச்சினையில் கோர்ட்டு தலையிட முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.


Next Story