2020-ம் ஆண்டு முதல் இந்திய எல்லைப்பாதுகாப்பு பணிகளில் ரோபோக்கள்?


2020-ம் ஆண்டு முதல் இந்திய எல்லைப்பாதுகாப்பு பணிகளில்  ரோபோக்கள்?
x
தினத்தந்தி 2 May 2019 8:16 AM GMT (Updated: 2 May 2019 8:16 AM GMT)

2020-ம் ஆண்டில் ரோபோக்கள் எல்லை பாதுகாப்பு பணி பயன்பாட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர்

இந்தியாவில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எல்லைப்பாதுகாப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்புத்துறை, பெல் நிறுவனம், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இந்த ரோபோ வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் வடிவமைப்பு பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோபோக்களின் மாதிரிகள் வெளியிடப்படும் என பெல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020-ம் ஆண்டில் ரோபோக்கள், பயன்பாட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் ஒன்றுக்கு 70 லட்ச ரூபாய் முதல் 80 லட்ச ரூபாய் வரை விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story