ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்


ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்
x
தினத்தந்தி 3 May 2019 9:45 PM GMT (Updated: 3 May 2019 9:41 PM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.

ஜாம்ஷெட்பூர்,

ஜார்கண்ட் மாநிலம் குந்தி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அர்ஜுன் முண்டாவின் தேர்தல் அலுவலகம், கார்சவான் நகரில் உள்ளது. அந்த அலுவலகத்துக்குள் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் புகுந்தனர். அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 டிரைவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர், வெடிகுண்டை பொருத்தி, அதை வெடிக்கச் செய்தனர். இதில், அலுவலகத்தின் பின்பக்க சுவர் சேதமடைந்தது. தகவல் அறிந்து போலீசார் வந்தபோது, 100 மீட்டர் ஒயர்கள், ஒரு டெட்டனேட்டர், மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Next Story