பஞ்சாப்: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தார்
பஞ்சாப் மாநிலத்தில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பஞ்சாப்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ரூப்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்ஜித் சிங், பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, கடந்த மாதம் 29-ம் தேதி மான்ஸா சட்டப்பேரவை உறுப்பினர் நாஸர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரசில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரசில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அமர்ஜித் சிங்கின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதல்மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது என கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ரூப்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்ஜித் சிங், பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, கடந்த மாதம் 29-ம் தேதி மான்ஸா சட்டப்பேரவை உறுப்பினர் நாஸர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரசில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரசில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அமர்ஜித் சிங்கின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதல்மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story