கேரளாவில் சுயேச்சை வேட்பாளருக்கு கத்திக்குத்து


கேரளாவில் சுயேச்சை வேட்பாளருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 19 May 2019 7:15 PM GMT (Updated: 19 May 2019 7:10 PM GMT)

கேரளாவில் சுயேச்சை வேட்பாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

தலசேரி,

கேரள மாநிலம் வடகரா நாடாளுமன்ற தொகுதியில் சி.ஓ.டி. நசீர் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நசீரை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் நகராட்சி கவுன்சிலரான நசீர், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் இருந்து விலகியதற்கு நசீரை, கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Next Story