தேர்தல் பின்னடைவு குறித்து மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை


தேர்தல் பின்னடைவு குறித்து மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 24 May 2019 7:30 PM GMT (Updated: 24 May 2019 7:03 PM GMT)

தேர்தல் பின்னடைவு குறித்து மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. முந்தைய தேர்தலில் 34 இடங்களை பிடித்திருந்தது. இந்த பின்னடைவு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க கட்சியின் அவசர கூட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூட்டியுள்ளார். அதில், கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கட்சியின் பலம், பலவீனம் ஆகியவற்றை ஆலோசித்து, எங்கள் தவறுகளை சரிசெய்வோம் என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

Next Story