பீகாரில் வீட்டில் தீப்பிடித்ததில் ஐக்கிய ஜனதா தள முன்னாள் பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது கணவர் காயம்
பீகாரில் வீட்டில் தீப்பிடித்ததில் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரது மனைவி காயமடைந்தனர்.
மங்கர்,
பீகாரின் மங்கர் நகரில் வசித்து வருபவர் மேவாலால் சவுத்ரி. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது மனைவி நீடா சவுத்ரி ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். நீடா தனது கணவருடன் மதோதி பகுதியில் நேற்றிரவு விருந்து ஒன்றில் கலந்து கொள்ள சென்றார்.
இதன்பின் வீடு திரும்பிய நீடா சமையலறையில் உள்ள சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டது பற்றி அறிந்துள்ளார். இதனால் உடனடியாக அதனை அணைக்க அங்கு அவர் சென்றுள்ளார். இதில் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இந்த சம்பவத்தில் நீடாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை காப்பாற்ற சென்ற கணவர் மேவாலாலுக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும் சடார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்பின்னர் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story