காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; பயங்கரவாதி உள்பட 2 பேர் பலி


காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; பயங்கரவாதி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 May 2019 4:02 PM GMT (Updated: 29 May 2019 4:02 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் பின்ஜூரா பகுதியில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தது.  அவர்களை நோக்கி கும்பல் ஒன்று கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டது.  அவர்களை கலைக்க பாதுகாப்பு படை பெல்லட் வகை குண்டுகளை கொண்டு துப்பாக்கியால் சுட்டனர்.  இதில் பலர் காயமடைந்தனர்.

அதேவேளையில், பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.  இதற்கு பதிலடி தரப்பட்டது.  இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  படை வீரர் மற்றும் பொதுமக்களில் தலா ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.

Next Story