பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. புகழாரம்


பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. புகழாரம்
x
தினத்தந்தி 29 May 2019 10:02 PM GMT (Updated: 29 May 2019 10:02 PM GMT)

பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் புகழாரம் சூட்டிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

Next Story