இன்று ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி கடந்து வந்த பாதை...!


இன்று ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி கடந்து வந்த பாதை...!
x
தினத்தந்தி 30 May 2019 9:18 AM GMT (Updated: 30 May 2019 9:18 AM GMT)

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. விஜயவாடாவில் நடைபெற்று வரும் விழாவில் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விஜயவாடா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக  இன்று பதவியேற்று கொண்டார்.விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

* 1972ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தார். 

* 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டதன் மூலம், முதன்முறையாக அரசியலில் கால் பதித்தார். 
* ஜெகன்மோகனின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2 முறை ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 

* 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டு ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிபெற்றார்.

*  2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஜெகன்மோகனின் தந்தையும், ஆந்திர முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மரணமடைந்தார். 
* ஒய்எஸ்ஆர் மறைவிற்குப்பிறகு, அவரது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையளிக்க, 2010 ஆம் ஆண்டில் ஆறுதல் பேரணியை மேற்கொண்டார். 

* ஆறுதல் பேரணியை நிறுத்துமாறு, ஜெகன்மோகன் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. இதனை அடுத்து ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ஜெகன்மோகன். 

* 2011 ஆம் ஆண்டில் கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

* 2012 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு 16 மாதங்கள் ஜெகன் மோகன் சிறையில் அடைக்கப்பட்டார். 

* 2013 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறையில் 125 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

* 2014 ஆண்டு நடந்த ஆந்திர சட்டமன்றத்தேர்தலில், ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி, தெலுங்கு தேசம் கட்சியிடம் தோல்வியடைந்தது. 

* 2014 ஆம் ஆண்டு தந்தையின் ஆஸ்தான தொகுதியான புலிவேன்துலாவில் போட்டியிட்டு MLA ஆனார் ஜெகன்மோகன்.  ஆந்திர சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். 

* 2017 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி மக்கள் குறைதீர்ப்பு பாத யாத்திரையைத் தொடங்கினார். 

* 430 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்ட பாத யாத்திரையால் ஆந்திர மக்களின் நாயகனாக ஜெகன் மாறத்தொடங்கினார். 

* நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத்தேர்தலில் 151 இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட்டார்.

Next Story