ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 30 May 2019 12:35 PM GMT (Updated: 30 May 2019 12:35 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் தங்கர்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதற்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  தொடர்ந்து நடந்த இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களின் உடல்களை கைப்பற்றிய வீரர்கள் அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளனர்.

Next Story