ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 31 May 2019 4:11 AM GMT (Updated: 31 May 2019 4:11 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம் டிரகட் சுகன் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.  இன்னும் சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கக் கூடும் என்று நம்பப்படுவதால், தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

Next Story