ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை


ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 14 Jun 2019 4:45 AM GMT (Updated: 14 Jun 2019 4:45 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே  தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story