நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா, சந்திரசேகர் ராவ் முடிவு


நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க  மம்தா, சந்திரசேகர் ராவ் முடிவு
x
தினத்தந்தி 15 Jun 2019 5:30 AM GMT (Updated: 15 Jun 2019 5:30 AM GMT)

நிதி ஆயோக் கூட்டத்தை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். இந்தக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில், மாநில அரசுகளின்  திட்ட செலவினங்களுக்கு நிதி அளிக்கும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டம் பயனற்றது என்று விமர்சித்த மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அவரைத்தொடர்ந்து தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

Next Story