ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 22 Jun 2019 5:28 AM GMT (Updated: 22 Jun 2019 5:28 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.  உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

Next Story