திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நியமனம்


திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
x
தினத்தந்தி 23 Jun 2019 8:45 PM GMT (Updated: 23 Jun 2019 8:42 PM GMT)

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. புதிதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் புட்டா சுதாகர் யாதவ் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ஓய்.வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகனின் சித்தப்பா ஆவார். இவர் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராகவும் இருக்கிறார்.


Next Story