கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு


கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
x
தினத்தந்தி 24 Jun 2019 6:35 AM GMT (Updated: 24 Jun 2019 6:35 AM GMT)

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அம்மன் சிலை அருகில் படுத்துக்கொண்ட முதலை மீது பூக்கள், குங்குமம் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வழிபட்டனர். முதலையை அகற்றுவதற்காக வந்திருந்த வனத்துறையினருக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வழியாக பக்தர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர், முதலையை பிடித்துச்சென்று அருகில் உள்ள குளத்தில் விட்டனர்.  

Next Story