நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது; மேலவையில் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது; மேலவையில் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2019 9:28 AM GMT (Updated: 24 Jun 2019 9:28 AM GMT)

நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் மேலவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான சஞ்சய் சிங், நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது.  இந்த விவகாரம் பற்றி பேசுவதற்கு உள்துறை அமைச்சகம் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

டெல்லி சாலைகளில் கடந்த ஒரு மாதத்தில் 220 முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.  கடந்த ஒரு வருடத்தில் 243 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.  கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

டெல்லியின் முகர்ஜி நகரில் இந்த மாத தொடக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் சரப்ஜீத் சிங் என்பவர் சாலையில் இழுத்து செல்லப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டார் என கூறிய அவர், கூட்டத்திற்கு டெல்லி முதல் மந்திரிக்கும் அழைப்பு விடப்பட வேண்டும்.  குற்றம் நடைபெறாமல் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story