பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு


பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 10:46 AM GMT (Updated: 25 Jun 2019 10:46 AM GMT)

மும்பையில் பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மும்பை தாதர் ரெயில் நிலையத்திற்கு வெளியே முகமது ஹனிப் சித்திக் என்பவர் வியாபாரி ஒருவரிடம் காய்கறிகளை வாங்கியுள்ளார். அப்போது பழைய 10 ரூபாய் நோட்டை வழங்கியுள்ளார். இதனால் வியாபாரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நேரிட்டுள்ளது. அது வன்முறையாக மாறியது. வியாபாரி கையிலிருந்த கத்தியால் முகமது ஹனிப்பை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story