ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை


ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை
x
தினத்தந்தி 26 Jun 2019 4:51 AM GMT (Updated: 26 Jun 2019 4:51 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால்  என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் பேரில்,  குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு  படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக அண்மையில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை ஒட்டி அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story