காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி
சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி தனது ராஜினாமாவை திரும்பப் பெற்று, கட்சித் தலைவராக தொடருமாறு வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story