தமிழக குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேச்சு
மக்களவையில் தமிழக குடிநீர் பிரச்சினை குறித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார்.
புதுடெல்லி
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர். பாலு பேசும் போது கூறியதாவது;_
சென்னை மாநகரம் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட அனைத்து நதிகளும் வற்றிவிட்டன; ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நதிகளை தவிர குடிநீருக்கு வேறு ஆதாரங்கள் இல்லை.
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். சென்னைக்கு முறையாக குடி நீர் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story