தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன்- பிரதமர் மோடி


தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Jun 2019 10:11 AM GMT (Updated: 26 Jun 2019 11:12 AM GMT)

தண்ணீர் பிரச்சினையை எம்.பி.க்களின் நிதி மூலம் எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி

மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது;-

நாட்டில்  226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. எம்பிக்களின் நிதி மூலம் நாட்டில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து முயற்சி செய்து வருகிறேன். இப்போது இதைச் சமாளிக்க அனைவரையும் அணி திரட்ட முயற்சிக்கிறேன். நீர் பிரச்சினைகள் குறித்தும் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு ஜல் சக்தி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது.

அக்யூட் என்செபாலிடிஸ் (மூளை காய்ச்சல்)  நோய் காரணமாக பீகாரில் ஏற்பட்ட இறப்புகள் துரதிர்ஷ்டவசமானது மற்றும் எங்களுக்கு அவமானகரமான விஷயம். இதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், விரைவில் இந்த நெருக்கடியிலிருந்து நாங்கள் கூட்டாக வெளியே வருவோம் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

Next Story