அரியானா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுட்டுக்கொலை


அரியானா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2019 5:52 AM GMT (Updated: 27 Jun 2019 7:50 AM GMT)

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் சதுர்வேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்  நகரில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக உள்ள  விகாஸ் சதுர்வேதியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பரிதாபாத் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு, காரில் ஏறிய சதுர்வேதியை, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். 

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த விகாஸ் சதுர்வேதியை அவரது உதவியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விகாஸ் சதுர்வேதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் கொலையாளிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். 

Next Story