காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு துறை அளித்த தகவலை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தபின் அவர்கள் இன்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story