மோடி அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை - ப.சிதம்பரம்


மோடி அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை  - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 4 July 2019 1:20 PM GMT (Updated: 4 July 2019 1:20 PM GMT)

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை மோடி அரசின் நம்பிக்கையற்ற அணுகுமுறையை கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி  மந்திரி  நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் 
அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.  

பொருளாதார ஆய்வு அறிக்கையில் 2019-20 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என கணிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  இது குறித்து காங்கிரஸ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ''பொருளாதார ஆய்வறிக்கை 2019 தொகுதி 1, பகுதி 1 ல் முதல் வரியே தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதாக அமைந்துள்ளது. துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக இது இல்லை. 

எனக்கு தெரிவது என்னவென்றால், பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் அரசு நம்பிக்கையற்ற முறையில் பேசுவதாக கருதுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story