திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் ரூ.100 கோடி தாண்டியது


திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் ரூ.100 கோடி தாண்டியது
x
தினத்தந்தி 6 July 2019 5:27 AM GMT (Updated: 6 July 2019 5:27 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், காசு பணங்களையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். உண்டியலில் குவியும் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் வசூலான உண்டியல் காணிக்கை தற்போது எண்ணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 91 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலான நிலையில் இந்தாண்டு ஜூன் மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் 100 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.

இந்த ஆண்டு மேலும் 9 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.13 கோடி லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

Next Story