எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள்


எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள்
x
தினத்தந்தி 12 July 2019 9:04 AM GMT (Updated: 12 July 2019 9:48 AM GMT)

திரிணாமுல்காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி 6 கட்டளைகளை வழங்கி உள்ளார்.

கொல்கத்தா,

2021-ல் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) வெற்றியை உறுதி செய்வதற்கான திட்டம் வகுப்பதில் முதலமைச்சரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கொல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பவனில் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோனை நடத்தினார். அந்த ஆலோசனையில், கட்சி உறுப்பினர்களுக்கு 6 முக்கியமான கட்டளைகளை  வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மம்தா பானர்ஜி  வழங்கிய கட்டளைகள் விவரம் வருமாறு:-

1. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இப்போது மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். 

2. எந்தவொரு விவகாரத்திலும் சிக்காதீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

3. நிர்வாகம் மற்றும் காவல்துறையை நம்ப வேண்டாம். உங்களுக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள். சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் நடத்தையை சரியாக வைத்திருங்கள்.

4. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள்.

5. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 4 பேர் கொண்ட குழுவை உருவாக்குங்கள். அந்த குழுவில் ஒரு சமூக ஊடக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குச்சாவடி மேம்பாட்டு மேலாளரை நியமியுங்கள்.

6. தவறான அறிக்கைகளையோ, கருத்துகளையோ யாரும் சொல்லக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Next Story