முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினராக இருந்தவர் நீரஜ் சேகர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நீரஜ் சேகர் நேற்று முன்தினம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், பொதுச்செயலாளர்கள் பூபேந்திர யாதவ், அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நீரஜ் சேகர் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினராக இருந்தவர் நீரஜ் சேகர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நீரஜ் சேகர் நேற்று முன்தினம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், பொதுச்செயலாளர்கள் பூபேந்திர யாதவ், அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நீரஜ் சேகர் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story