ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு


ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு
x
தினத்தந்தி 18 July 2019 5:47 AM GMT (Updated: 18 July 2019 5:47 AM GMT)

ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம்,  ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டு, வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்திராயன் -2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Next Story