உ.பி.மாநிலம் நாராயண்பூரில் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா - கைது


உ.பி.மாநிலம் நாராயண்பூரில் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா - கைது
x
தினத்தந்தி 19 July 2019 7:13 AM GMT (Updated: 19 July 2019 7:13 AM GMT)

உ.பி.மாநிலம் நாராயண்பூரில் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

லக்னோ

உ.பி.மாநிலம் நாராயண்பூரில் ஜூலை 17 ம் தேதி நிலப்பிரச்சனை தொடர்பாக துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  சென்றார். அங்கு  அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பின்னர் சோன்பத்ரா வந்த பிரியங்கா காந்தி வாத்ரா காவல்துறையினரால் தடுத்து காவலில் வைக்கப்பட்டார். "சோன்பத்ரா துப்பாக்கி சூடு வழக்கில்  நான் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது என காவலில்  இருந்த  பிரியங்கா காந்தி  கூறினார்.



Next Story