போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்


போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 19 July 2019 8:30 PM GMT (Updated: 19 July 2019 7:42 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகாரா பகுதியை சேர்ந்தவர் முப்தி சஜாத். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவரான இவர், முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் உறவினர் ஆவார். முப்தி சஜாத் நேற்று தனது வீட்டு அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் அதிகாரியான பாரூக் அகமது மசூதிக்கு வெளியே நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாரூக் அகமதுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Next Story