நொய்டாவில் அதிரடி; சாலையோரம் மது அருந்திய 36 பேர் பிடிபட்டனர்


நொய்டாவில் அதிரடி; சாலையோரம் மது அருந்திய 36 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 20 July 2019 9:24 PM GMT (Updated: 20 July 2019 9:24 PM GMT)

நொய்டாவில் சாலையோரம் மது அருந்திய 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நொய்டா,

தலைநகரான டெல்லி அருகே உள்ள நொய்டா தொழில் நகரமாகும். இங்கு சாலை விதிகளை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கவும் போலீசார் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையடுத்து தனிப்படைகள் அமைத்து 2 பிரிவாக போலீசார் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய இந்த சோதனையில் சாலையோரங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து கவுதம்புத் நகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “சமூகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட சாலைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் இதே போன்று கடந்த 6-ந் தேதி நடந்த சோதனையில் பொது இடங்களில் மது அருந்தியதாக 474 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story