கழற்றிவிட்ட காதலி : தூக்கில் தொங்கிய காதலன் -பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு


கழற்றிவிட்ட காதலி : தூக்கில் தொங்கிய காதலன் -பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு
x
தினத்தந்தி 22 July 2019 5:23 AM GMT (Updated: 22 July 2019 5:23 AM GMT)

தான் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து உள்ளார்.

ஆக்ரா,

ஆக்ராவை சேர்ந்தவர் ஷியாம் சிகர்வார் ( வயது 22) . இவர் ஒரு பெண்ணை  காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு  வேரு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் வாழ்வில் மிகவும்  வெறுப்படைந்த  நிலையில் இருந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஷியாம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ராய்பா கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு கோவிலுக்குச் சென்றுள்ளார். கோவில் வளாகத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சியை அவர் தனது பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். அவரது நண்பர்கள் பலர் அவரை வீடியோவில் தூக்கில் தொங்குவதைப் பார்த்ததால் அவர் இந்த செயலை லைவ் ஸ்ட்ரீம் செய்தார். அவர் தற்கொலை செய்யப் போவதாக ஏற்கனவே தனது நெருக்கமான பலரிடம் கூறியிருந்தார்.

பேஸ்புக்கில் பதிவேற்றிய  நான்கு நிமிட வீடியோவில், ஷியாம் சிகர்வார் தனது மரணத்திற்கு காரணமாக எவரையும் கைது செய்ய வேண்டாம் என்று கூறி  உள்ளார். தனது உடலின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றுமாறு தனது குடும்ப உறுப்பினர்களிடமும் கூறி உள்ளார்.

அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,

நான் அவளை இழக்கிறேன்
அவள் இல்லாமல் வாழ முடியாது
அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறாள் 
இந்த உண்மையை என்னால் தாங்க முடியாது. 
அவளை இழந்த மன அழுத்தம் 
என்னை மிகவும் பாதித்தது,
நான் என் வேலையை இழந்தேன்  என எழுதி வைத்து உள்ளார்.

Next Story