மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 100 பேர் கதி என்ன?
மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் சிக்கி உள்ளனர்.
மும்பை,
மகாராஷ்டிராவின் மும்பையில் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (எம்.டி.என்.எல்.) கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்றுள்ளன.
அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தின் மேல்தளத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story