மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் தீ விபத்து; 84 பேர் மீட்பு
மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 84 பேர் மீட்கப்பட்டனர்.
மும்பை,
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (எம்.டி.என்.எல்.) கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்றன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் மேல்தளத்தில் பலர் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இந்நிலையில், கட்டிடத்தில் சிக்கியிருந்த 84 பேரும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு விட்டனர்.
Related Tags :
Next Story