பீகாரில் வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு


பீகாரில் வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 July 2019 4:32 PM GMT (Updated: 22 July 2019 4:32 PM GMT)

பீகாரில் வெள்ள பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்து உள்ளது.

பீகாரில் பருவமழை தொடங்கியபின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

பீகாரில் வெள்ள பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்து உள்ளது.  லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து உள்ளனர்.  நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக 125 இயந்திர படகுகளும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளின் 26 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.

இதுவரை 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1.16 லட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 676 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  வியாதிகளை தடுக்க மருந்து மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

Next Story